ஒஸ்திரியாவில் தனக்கு நேர்ந்த இனம் சார்ந்த பாகுபாடு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்து அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் இனவெறிக்கெதிரான வலைப்பூவை தொடங்கியுள்ளார்.
தனது பாரம்பரிய ஆடையை கேலி செய்ததுடன், அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிய வியன்னா நகர இளையோர் பற்றிய கின்ஷாசாவின் பதிவுகளில் மனதை புண்படுத்தக்கூடிய வகையிலான வார்த்தைகள் இருந்ததால் அதை நீக்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.