இந்தியாவில் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை, 51,804,677 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டில் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை 5 கோடியே 18 இலட்சத்து 4 ஆயிரத்து 677 கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
புதன்கிழை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 11 இலட்சத்து 54 ஆயிரத்து 549 க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைக்கு நடத்தப்பட்டுள்ளன.
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பரிசோதனை அதிகரித்து வருவதன் மூலம் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் தொற்று பரவலை தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஜூலை மாதத்தில் வாராந்திர அடிப்படையில் 3.26 இலட்சமாக இருந்த தினசரி பரிசோதனை எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்து 10.46 இலட்சமாக அதிகரித்துள்ளது. ஜூலை 1 ஆம் திகதி 10 இலட்சம் பேருக்கு 6,396 பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்த பரிசோதனை, தற்போது 36,703 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகள் நாளொன்றுக்கு 10 இலட்சம் பேரில் 140 பேருக்காவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியிருந்த நிலையில், ஜூலை 2 வது வாரத்திலே அந்த எண்ணிக்கையை கடந்து விட்ட இந்தியா, தற்போது 758 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 1,668 பரிசோதனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1,035 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,706 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 1,115 பேர் பலியாகி உள்ளனர்.
நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 89,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,70,129 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், புதன்கிழமை காலை வரை மொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 3,398,845 ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 77.65 சதவீதம் ஆகும். கொரோனாவுக்கு புதிதாக 1,115 போ் பலியானதை அடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 73,890 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 897,394 போ் சிகிச்சையில் உள்ளனா். கொரோனா பலி சதவீதம் 1.70 ஆக உள்ளது.