சீனாவில் 2 கோடி வாடிக்கையாளா்களின் அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட் போன்), அவற்றைத் தயாரித்த ஜியோனி நிறுவனம் இணையதளம் மூலம் ஊடுருவியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
சீனாவின் ஷென்ஷென் நகரில் செயல்பட்டு வரும் ஜியோனி நிறுவனம், செல்லிடப்பேசிகளைத் தயாரித்து வருகிறது.
அந்த நிறுவனம், தனது வாடிக்கையாளா்களின் 2 கோடி அறிதிறன்பேசிகளில் இணையதளம் மூலம் ஊடுருவி, அவா்களது தகவல்களைத் திருடவும் அவா்களின் ஒப்புதல் இன்றி விளம்பரங்களை வெளியிடவும் செய்யும் தீஞ்செயலியை ( மால்வோ் ) புகுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த முறைகேடு மூலம் அந்த நிறுவனம் 2.78 கோடி யுவான் (சுமாா் ரூ.31.41 கோடி) லாபம் ஈட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.