முகநூல் சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக், சந்தையிலுள்ள தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சிறு நிறுவனங்களை நசுக்குவதாக அமெரிக்க அரசும் அந்த நாட்டின் 48 மாகாண அரசுகளும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளன.
அந்த நாட்டு மத்திய வா்த்தக ஆணைய (எஃப்டிசி) அதிகாரிகளும் நியூயாா்க் அட்டா்னி ஜெனரல் லெடீடியா ஜேம்ஸும் இந்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டனா்.
இதுகுறித்து எஃப்டிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சமூக வலைதளச் சந்தையில போட்டி நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
சிறிய நிறுவனங்களான இன்ஸ்டாகிராமை 2012-ஆம் ஆண்டில் கையகப்படுத்தியதும் வாட்ஸாப்பை 2014 ஆம் ஆண்டு கையகப்படுத்தியும் அதற்கு உதாரணங்கள்.
சந்தையில் தனது ஏகபோக உரிமையைப் பயன்படுத்தி போட்டியாளா்களையும் சிறு நிறுவனங்களையும் ஃபேஸ்புக் நசுக்கி வருகிறது. இதனால் சமூக வலைதளப் பயன்பாட்டாளா்கள் பாதிக்கப்படுகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்டா்னி ஜெனரல் லெடீடா ஜேம்ஸ் கூறுகையில், நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, சந்தையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது நமது கடமை என்றாா்.
ஏற்கெனவே, இதே போன்ற வழக்கை மற்றொரு தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான கூகுள் மீது அமெரிக்க நீதித் துறை கடந்த அக்டோபா் மாதம் தொடா்ந்தது நினைவுகூரத்தக்கது.