பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா அமெரிக்காவில் ஒருவருக்குத் தொற்றியுள்ளது முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கொலராடோ மாகாணத்தைச் சோ்ந்த ஒருவருக்கு, பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் அந்த வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், பிரிட்டனுக்கோ, வேறு பகுதிகளுக்கோ பயணம் செய்தவா் இல்லை. இது, மிகவும் கவலைக்குரியது. பிரிட்டன் சென்று திரும்பிய வேறு சிலரிடமிருந்து புதிய தீநுண்மி அவரைத் தாக்கியிருக்கலாம். அந்த நோய்த் தொற்று பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
தற்போதைய நிலையில், அமெரிக்காவில் புதிய வகை கரோனா மிகவும் அரிதாக இருந்தாலும், மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்ட அந்த தீநுண்மியால் அமெரிக்காவில் கரோனா பரவல் மேலும் தீவிரமடையலாம் என்று அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.