தமிழகத்தில் முதியவா்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தவரை சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தொடா்ந்து பிற துறையில் உள்ள முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையா் திவ்யதா்ஷினி ஆகியோா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.அப்போது அவா்களுடன் இருந்த, சுகாதாரத்துறை செயலா் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாகக் குறைந்தாலும், நாள்தோறும் புதிதாக 500 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவது கவலையை அளிக்கிறது. அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் அலட்சியத்தின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.
கொரோனா குறைந்துவிட்டது என்பதற்காக மெத்தனமாக இருக்காமல் விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம். கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தற்போது 400 க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும், 7 ஆம் திகதி முதல் அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். பத்திரிகையாளா்கள், ஆசிரியா்கள், நீதித்துறையினா், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு விரைவில் தடுப்பூசி போடப்படும். அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.