சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் தன்னை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகைகளுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகரை சவுதியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையக போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, வெளியாகியுள்ள வீடியோ பதிவில் பெண்களுக்கு இடையில் அவர் நின்றுகொண்டிருக்கும் வேளையில் வெள்ளை அங்கி அணிந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், துபாய் நாட்டின் பிரபல நடிகரான அப்துல் அஜிஸ் அல் கஸ்ஸார் என்பவரை பிடித்து, இழுத்து, ஷாப்பிங் மாலில் இருந்து வெளியேற்றினர்.
சவுதி நாட்டு சட்டங்களின்படி, பொது இடங்களில் பெண்களுடன் பழகுவதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதால் அப்துல் அஜிஸ் அல் கஸ்ஸாரை அந்த போலீஸ்காரர் ஒரு காரில் ஏற்றி, ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.