ராய் லட்சுமி நடிப்பில் தற்போது தமிழில் உருவாகி வரும் ‘சவுகார் பேட்டை’. இதில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து வருகிறார். இதில் ராய் லட்சுமி பேயாக நடித்து வருகிறார். படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 3 நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐதராபாத் சென்று ‘சர்தார் கப்பார் சிங்’ படத்தின் பாடலுக்காக 4 நாட்கள் ஆடியுள்ளார். அதன்பிறகு ‘ஜூலி 2’ படத்துக்காக நடனம் ஆடியிருக்கிறார். இப்படி தொடர்ந்து 10 நாட்களுக்குமேல் நடன காட்சியில் ஆடியதால் அவரது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.
‘ஜூலி 2’ படத்துக்காக நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது திடீர் என்று கால் வலியால் துவண்டு விழுந்திருக்கிறார். வலியில் அலறி துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு ராய் லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவரது நரம்புகள் தடம்மாறி இருப்பதாகவும் அதை ஆபரேஷன் செய்துதான் சரி செய்ய முடியும் என்று கூறினார். இதனால் ராய் லட்சுமி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துள்ளார்.
தற்போது நலமாக இருப்பதாக ராய் லட்சுமி கூடியுள்ளார். இன்னும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதால் மருத்துவமனையிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.