“கில்லிங் வீரப்பன்” என்ற பெயரில் ராம் கோபால் வர்மா இயக்கி வெளியிடும் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தமிழ் மக்களை தரம் தாழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை எடுத்துள்ளதாகவும், மலைவாழ் மக்களை தவறாக சித்தரிப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
வீரப்பன் ஒரு கொடூர கொலைகாரன் என்பதை போலவும், 184 பொதுமக்கள், 97 போலீஸ்காரர்கள், 900 யானைகளை கொன்றதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
பல பொய்யான தகவல்களை படம் கூறுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
படம் ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பை பொருத்து படம் வெளியாகுமா என்பது தெரியவரும்.