பீப் பாடலால் சிம்புவுடன் சேர்த்து அனிருத் பெயரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் பல படங்களின் வாய்ப்பை அனிருத் இழந்து விட்டார்.
அனிருத் இந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று சிம்புவே கூறினாலும், பலரும் அதை நம்புவதாக இல்லை.
இந்நிலையில் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் ஆல்பத்தை அனிருத் உருவாக்கியுள்ளாராம்.
கண்டிப்பாக இப்பாடல் இளைஞர்களுக்கு மிகவும் பிடிப்பது மட்டுமில்லாமல், அனிருத் தான் இழந்த இடத்தை பிடிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்.