பொது வெளி என்றான தருணங்களில் எது அந்தரங்கம்? நான் என்னுடன். நான் உன்னுடன். நாம் நினைவுகளுடன். கவிதைக்கான குறிப்புகள் கனவுகளில் கவிழ்வதைப் போல் கவிழ்கின்றன. பிறிதொரு நாளில் பிரபஞ்சப் பாழ்வெளியில் எனக்கான கவிதைகளில் உனக்கான குறிப்புகள் இருக்கும்.
மவுனத்திற்கு ஒரு மொழி உண்டு, மவுனம் மட்டுமே அறிந்த மொழி, மனங்கள் மட்டுமே பேசும் மொழி, மவுனத்தின் மொழி புரியாத வரை தான் சிக்கல் ! சில நேரம் மவுனம் கோபத்தின் வெளிப்பாடு, சில நேரம் சந்தோஷத்தின் உச்ச நிலை ! சந்தோஷத்தில் பிறக்கும் மவுனம் சாகித்ய
உயிரை உறுக்கும் பெண்ணே – உன் கண்ணில் என்ன காந்தமோ……. கண்ணை கிள்ளும் கனவே – உன் முகத்தில் என்ன மோகமோ…… வெடிக்கத்துடிக்கும் எரிமலை – கூட உன்னழகில் அகிம்சையானது சுழன்று வரும் சூறாவளி – கூட உன்
நட்புக்கு ஒரு தினம் தேவையில்லை – உண்மை நண்பன் இருப்பவன் தோற்றதில்லை அத்தனை தினங்களும் எமக்காகத்தான் – நாம் அனுதினம் வாழுவோம் அன்பாகத்தான் நண்பர்கள் எனக்கின்று இல்லையென்றால் – தோழா நான் இன்றும் சாணமாய் கிடந்திருப்பேன் சந்தனமாய்
மோப்பமிட மட்டுமே தெரிந்த உன் திருட்டுப்பூனையை என் அடுக்களைக்குள் வரவிடாதே. தூக்கிவைத்து கருவாடு ஊட்டும் லாவகம் எப்போதும் எனக்கு கைவருமா தெரியவில்லை! நேசன்.
உன் கண்கள் பனித்திருக்கிறதே ஏன் என்றேன் .. வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தேன் எனப் பதில் சொன்னாள் ! வெங்காயக் கண்ணீருக்கும் வெந்த கண்ணீருக்கும் வித்தியாசம் தெரியாதவனா நான் என்ன ? உடல் உஷ்ணமானால் வேயர்வையாகும் உள்ளம் பஸ்பமானால் கண்ணீராகும் ..